1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட

மண்ணுக்குள் இருந்து  மீட்கப்பட்ட   கைக்குண்டை செயலிழக்கச் செய்ய  விசேட அதிரடி படையினரால்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட   வீடு ஒன்றில் நேற்று (21) மாலை  கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட   மண்ணில் புதையுண்ட நிலையில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
 
IMG 20241022 100708 800 x 533 pixel
 
அத்தடன் குறித்த  கட்டட வேலையில் ஈடுபட்டவர்கள்   119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டுடை பார்வையிட்டதுடன் குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மீட்கப்பட்ட கைக்குண்டை அங்கிருந்து அகற்றி செயலிழக்கஞ் செய்வதற்காக இன்று  சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற கட்டளையை பெற்று  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி