அமெரிக்கா, கனடாவைப் பின்பற்றி, இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் சவேந்திர சில்வா, ஜெனரல் ஜகத்
ஜயசூரிய ஆகியோருக்கு எதிராகப் பிரிட்டன் உடனடியாகத் தடைகளை விதிக்க வேண்டும் என்று லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் எட்டேவே கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு இலங்கையைப் பிரிட்டன் கேட்டுக்கொள்ள வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
(காலைமுரசு)