பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்தச் சம்பளத்தை அதிகரிக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்,
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தலைவர்களுடன் ஜனாதிபதிச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் என்று, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை, இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னள் அதிகரிப்பதற்கான இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தனக்கு அறிவிக்குமாறும், ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
அதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாளாந்தம் 1799 ரூபாய் சம்பளம் வழங்கப்பட ஏதுவான வகையில் கூட்டு ஒப்பந்தமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும் இது தொடர்பான தீர்மானத்தை டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் அறிவிக்குமாறும், பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.