ஊழல், மோசடி செய்பவர்கள் இல்லாத புதிய கூட்டணி உருவாக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன
ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய பீடத்தின் தலைவரான அதிமேதகு வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்துவிட்டு, அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உபுல் தரங்க போன்ற வீரர்களை தெரிவுக்குழு தலைவர் பதவிக்கு நியமித்தமை நல்லதொரு முடிவு எனவும் அர்ஜுன ரணதுங்க இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் தெரிவிக்க நேற்று சென்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.