கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் மீள்புனரமைக்கப்பட்ட மகா பனிக்கட்டியாவ குளம் திறந்து
வைக்கப்பட்டது.
37.45 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த திட்டமானது, திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு கணிசமான நன்மைகளை வழங்கும் வகையிலும் விவசாய பாவனைக்கான நீர் வினைத்திறனை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரலவும் கலந்துகொண்டார்.