1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நிலவும் கனமழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இலங்கையின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, உடபாலயத மற்றும் மெடதும்பர ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல, உக்குவெல அம்பங்கங்க கோரளை மற்றும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம ஆகிய பிரதேசங்களுக்கும் முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் ஹகுரன்கெத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான மற்றும் குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கு முதல் நிலை எச்சரிக்கை

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி