தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சிப் போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா
முதலிடம் பெற்ற நிலையில், அசவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் கில்மிஷாவை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.