1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் டலஸின் சுதந்திர மக்கள் சபையிடையே ஜனவரியில் உருவாகப்போகும் புதிய கூட்டணி குறித்து அரசியல்

வட்டாரத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

ஒரு குழுவினர் கூட்டணியை நிறுத்திவிட்டு நேரடியாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய முயற்சிக்கின்றனர். இதனால் டலஸ் தனித்துவிடப்படுவதாகவே தெரிகிறது.

அரசியல் களத்தில் கேட்கும் இந்தக் கதையின்படி, ஐமச மட்டுமல்ல, தேசிய மக்கள் சக்தியையும் இணைத்துக்கொண்டு, ரணில் ராஜபக்ஷ தரப்புக்கு எதிராக பாரிய கூட்டணியொன்று அமைக்கப்பட வேண்டுமென்ற விடயத்தில் டலஸ் உறுதியாக இருக்கிறாராம்.

ஆனால் சுதந்திர சபையில் டலஸ் தரப்பில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருப்பதால், ஐமசவுடன் கூட்டு சேரவேண்டிய அவசியம் இருக்கிறதாம். இந்தப் பின்னணியில் சுதந்திர மக்கள் சபை உடைந்து சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது.

சுதந்திரச் சபையும் டலஸிடமிருந்து பறிபோகப்போகிறதா என்பது அடுத்த மாதம் தெரியவரப்போகிறது. இதனிடையே, உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் டலஸுக்கு உயர் பதவி வழங்குவது தொடர்பாக சில கருத்து மோதல்கள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் எம்பிக்களிடையே பிளவொன்று காணப்படுவதாக, கடந்த செய்தித் தொகுப்புகளில் நாம் தெரிவித்திருந்தோம்.

அக்கட்சியைச் சேர்ந்த நான்கு எம்பிக்கள், சஜித்தின் கூட்டணியில் நேரடியாக இணைந்துகொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனராம். பேராசிரியர் ஜீஎல் பீரிஸ், டிலான் பெரேரா, நாலக்க கொடஹேவா மற்றும் ஷன்ன ஜயசுமன ஆகியோரே அந்த நால்வராவர்.

நாம் முன்னமே குறிப்பிட்டது நினைவிருக்கலாம். ஆனால், அரசியல் என்பது வானிலை போன்றது. நாளை என்பது இப்போது நிலைமை இல்லை. நாளை இன்னும் வித்தியாசமாக இருக்கலாம். எனவே, முன்கூட்டிய கருத்துக்களுக்குப் பதிலாக டலஸ் தரப்பைப் பற்றி நன்றாகக் கவனிப்பது முக்கியம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி