விசாரணை என்ற போர்வையில் எமது நேரத்தை வீண்டிப்பதாக, காணாமற்போனவர்களுக்கான அலுவலகத்தின் (ஒ.எம்.பி) மீது
பாதிக்கப்பட்ட உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
காணாமல் போனவர்களிற்கான அலுவலகத்தின் விசாரணை ஒன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (22) இடம்பெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் கலந்துகொண்டு சாட்சியமளித்திருந்தனர்.
குறித்த விசாரணைகளில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்ட உறவுகள் ஊடகங்களுக்கு பதில் அளித்தபோது, “ஏற்கனவே இந்த அலுவலகத்திற்கு நாம் பல ஆவணங்களை வழங்கியிருக்கின்றோம். இதில் எமக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை” என்றனர்.
“இதுவரை எமது பிள்ளைகள் தொடர்பாக எந்தவிதமான பதிலையும் இந்த அலுவலகம் வழங்கவில்லை. அவர்களுக்கு வேலை இல்லாதமையினால் எமது நேரத்தை வீண்டிக்கின்றார்கள்” என்று தெரிவித்தனர்.