இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினத்தில் மட்டும் ஏற்பட்ட நில அதிர்வுகளின் எண்ணிக்கை 4 ஆகும்.
இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5 அலகுகளாகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் திருமதி நில்மினி தல்தேனா தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 3 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் திருமதி நில்மினி தல்தேனா தெரிவித்தார். ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.
எவ்வாறெனினும், இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுக்கு அருகில் பதிவாகியுள்ளன. கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.