2023 இற்கான உயர்தர பரீட்சைகள் ஜனவரி 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் உயர்தர
மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் 25 மாவட்டங்களில் இருந்தும் உயர்தரத்திற்குத் தோற்றவுள்ள மாணவர்களும் பாடசாலைக்கு வருவதை உறுதிப்படுத்தவும் எந்த பிரச்சனையும் இல்லாமல் பரீட்சைகளை எழுதவும் பேரிடர் முகாமைத்துவம், ஆயுதப்படைகள், காவல்துறையினர் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.