1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனவரி 03ஆம் திகதியிடப்பட்ட நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள துறைகள் பின்வருமாறு;

மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் மற்றும் விநியோகம்.

சுங்க கட்டளைச் சட்டத்தின் (235) நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்டுள்ளபடி, எந்தவொரு துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம், அல்லது நிலக்கரி, எண்ணெய் அல்லது எரிபொருளின் பொருட்களை வெளியேற்றுதல், தரையிறக்கம், களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் அகற்றுதல்

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட விமான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி