1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (தாமரை மொட்டுச் சின்னம்) ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இந்தாண்டு தேர்தல் ஆண்டாகும். அத்துடன், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடியதும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கும் ஆண்டாகவே நான் இதைப் பார்க்கிறேன். அந்தவகையில், எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க, மொட்டுக் கட்சி தயாராகவே இருக்கிறது.

“மொட்டுக் கட்சியின் வேட்பாளர் யாரென்ற கேள்வியை அனைவரும் கேட்டு வருகிறார்கள். எவ்வாறெனினும், இது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. கட்சியின் செயற்குழுவில் கலந்துரையாடப்பட்டு, தக்க தருணத்தில் வேட்பாளர் யாரென்பதை அறிவிப்போம். அந்த வேட்பாளர், மக்கள் எதிர்பார்க்குமளவுக்கும் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியவராகவும் இருப்பார் என்பது உறுதி” என, நாமல் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி