1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மதப் போதனைகளை வழங்கி உயிரிழந்த ருவன் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதாக கூறப்படும்

திம்புலாகலை - சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை விஷம் அருந்தியதால், தெஹியத்தகண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென்று, சிறிபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ருவன் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கிற்கு, அவரும் அவரது மனைவியும் சென்றிருந்ததாகவும், அந்த பயணத்தில் நுவரகல பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஐந்து பேர் கலந்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நபர், குணரத்னவின் போதனைகளில் கலந்து கொண்டாரா இல்லையா என்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்ட பெண் ஒருவர், அப்பகுதியில் பல மதப் போதனைகளை நிகழ்த்தியுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறிபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விரிவுரைகளை வழங்கியதாகக் கூறப்படும் ருவன் பிரசன்ன குணரத்ன, தெஹியத்தகண்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில், சுமார் ஆறு வருடங்களாக வாடகைக்கு தங்கியிருந்தமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ருவன் பிரசன்ன குணரத்ன என்பவர், டிசம்பர் 28ஆம் திகதி ஹோமாகம - மஹாகும்புர பிரதேசத்தில் ஒரு வகை விஷத்தை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் அவ்வாறே தற்கொலை செய்துகொண்டனர்.

ருவன் பிரசன்ன குணரத்னவின் மதப் போதனைகளில் கலந்துகொண்ட பலர், பொலன்னறுவையின் பல பிரதேசங்களில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்புப் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

இந்த சமூக அவலநிலை குறித்து, திம்புலாகல ஆரண்ய சேனாதிபதி திம்புலாகல ராகுலலங்கார மஹாநாயக்க தேரரிடம் வினவியபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

” மனித உயிரின் மதிப்பைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எந்த மதத் தத்துவமும் கொலையையோ தற்கொலையையோ மன்னிப்பதில்லை. அண்மைக்காலமாக இலங்கையில் பல்வேறு மதக் கருத்துக்களைக் கொண்ட பல்வேறு மதத் தீவிரவாதிகள், பல்வேறு தீவிரவாத போதனைகளை பின்பற்றுபவர்களை தூண்டிவிட்டு தமது மதவெறிக் கருத்துக்களை நிறைவேற்ற முயல்வதாகத் தெரிகிறது. அதற்கு சிறந்த உதாரணம் ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் தீவிரவாத போதனைகள். அண்மைக்காலமாக தனது பிரசங்கங்கள் மூலம் தன்னைப் பின்பற்றுபவர்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு அல்லது இவ்வுலகை விட்டுச் சென்று நல்ல எதிர்காலத்தைப் பெறுமாறு தூண்டிவிட்டு, இதுவரையில் தனது முழுக் குடும்பம் உட்பட 07 பின்தொடர்பவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பௌத்தத்தில் தற்கொலை என்பது உயிர்க் கொலை என்றே கருதப்படுகிறது. தற்கொலை என்பது கொலைக்கு சமம். எனவேதான் இத்தருணத்தில் அவரது சொற்பொழிவுகளில் கலந்துகொண்ட அனைவரும், பொது மக்களும், மதவெறியர்களின் மூடநம்பிக்கை போதனைகளை விட்டொழித்து, மனித வாழ்வின் மதிப்பை உணர்ந்து, புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும் என நினைவூட்டப்பட்டு வருகிறது” எள்றார்.

சயனைட் என சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட ருவன் பிரசன்ன குணரத்னவின் போதனைகள் மற்றும் அந்தப் போதனைகளில் கலந்துகொண்டவர்கள் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் தற்கொலைக்கு பயன்படுத்திய சயனைட் என சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் போதனைகளில் கலந்துகொண்ட இளம் பெண் மற்றும் இளைஞன் உட்பட ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

முகநூல், சமூக ஊடகங்கள், மதஸ்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமய சொற்பொழிவுகளை நிகழ்த்திய ருவான் பிரசன்ன குணரத்ன என்ற நபர் மற்றும் அவரது போதனைகள் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த விரிவுரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்ன, அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் மற்றும் அவரது விரிவுரைகளில் கலந்துகொண்ட இரண்டு சீடர்களும் தற்கொலை செய்துகொண்டனர்.

தான் முக்தியடைந்ததாக உரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்ன, தனது உரைகளில் மரணம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பல்வேறு போதனைகளை நடத்தி, தன்னைப் பின்பற்றுபவர்களை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளாரென்று, புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த விரிவுரையின் இரண்டு நாட்களுக்குப் பிறகு, கொட்டாவ - மஹாகும்புரவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து, ருவன் குணரத்ன தற்கொலை செய்து கொண்டார், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள், மாலபே – பிட்டுகல பகுதியில் தற்கொலை செய்துகொண்டனர்.

அம்பலாங்கொட - திலகபுர பிரதேசத்தை சேர்ந்த மொரிஸ் மொஹான் பிரீத்தி குமார என்ற 35 வயதுடைய நபரும் இறுதிவ் சடங்கில் கலந்துகொண்ட யக்கல - ரபல்வத்த பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான தினிதி மந்தாகினி என்ற பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான யுவதியொருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஏழு மரணங்களும் சயனைட் என சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருட்களை உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும், விரிவுரைகளை வழங்கிய ருவான் பிரசன்ன குணரத்னவே அந்தப் பொருட்களை அவர்களுக்கு வழங்கியிருக்கலாம் எனவும் பொலிஸார் கருதுகின்றனர்.

ருவன் பிரசன்ன என்பவர், பிரதான வைத்தியசாலையொன்றின் ஆய்வகத்தில் பணிபுரிந்ததாகவும், அங்கு அவர் இந்த இரசாயனங்களை தயாரித்துள்ளதாக நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், தற்கொலை செய்து கொண்ட மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் உடல் உறுப்புகள், தற்கொலை செய்து கொண்ட 21 வயது இளம்பெண்ணின் ரத்த மாதிரிகள் ஆகியவை மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, யக்கல பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்ட யுவதியின் மரணம் தொடர்பில் வெளிப்படையான விளக்கம் கிடைத்துள்ளது. அதாவது, கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதியன்று, மஹரகம விடுதி ஒன்றில் தற்கொலை செய்துகொண்ட இளைஞனுடன் ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற போதனையில், மேற்படி யுவதியும் கலந்துகொண்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, மஹரகமவில் உள்ள விடுதி ஒன்றில் தற்கொலை செய்துகொண்ட இளைஞன், தனது உயிரை மாய்ப்பதற்கு முன்னர் ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளார். அவர் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட ருவன் பிரசன்ன தனது குரு எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், தான் அவரைப் பின்பற்றுபவர் என்றும், தானும் ஒரு தியானத்தைப் பெற்றிருப்பதாகவும், அவர் பொலிஸாரிடம் கூறியிருந்தார்.

தீவிரவாத சிந்தனைகளை ஊக்குவிப்பதாக சந்தேகிக்கப்படும் ருவன் பிரசன்ன குணரத்ன, தனது பிள்ளைகள் இருவரை ஒன்றரை வருடங்களாக பாடசாலைக்கு அனுப்பாமல் தனது போதனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளாரென்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், அநுராதபுரம், காலி, குருநாகல் போன்ற பல பிரதேசங்களில் போதனைகளை நிகழ்த்தியுள்ள அவர், இதுவரை அந்த விரிவுரைகளில் கலந்து கொண்ட இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் உட்பட ஆறு பேரிடம், பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அவரைப் பின்தொடர்பவர்களில், யக்கல பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட 21 வயது யுவதியின் சகோதரரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ருவன் பிரசன்ன குணரத்னவின் சீடராக இருந்துள்ள நாவல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், சுரையொன்றை அணிந்துகொள்வதற்காக, பிரசன்னவுக்கு 60 இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளாரென்றும், தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறெனினும், பிரசன்னவின் போதனைகளில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி