எதிர்வரும் 16ஆம் திகதியன்று, தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை நீக்கிவிட்டு முன்னாள் பிரதமரின்
செயலாளர் காமினி செனரத்னவை அந்த பதவிக்கு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மதித்துள்ளதாக, யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமன் ஏக்கநாயக்கவுக்கு எம்.பி.க்கள் எதிராக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பசில் ராஜபக்ஷ விரும்புவதாகவும் வீரதுங்க அதே நேர்காணலில் கூறுகிறார்.