எதிர்வரும் காலங்களில் இந்நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள்
பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பேராசிரியர், இந்த நாட்டில் பிறப்பு வீதம் 25 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நம் நாட்டின் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. உதாரணமாக, 2013இல் நம் நாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், 20இல் பிறந்தவர்களின் எண்ணிக்கை உண்மையில் 90,000ஆல் குறைந்துள்ளது. அதாவது, 2013இல் பிறந்தவர்களின் எண்ணிக்கையையும் 2022இல் பிறந்தவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், 25% குறைவு. பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை இறப்பு எண்ணிக்கையை நெருங்கி வருகிறது.
“இளம் சமூகம் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது உட்பட பல காரணிகளால் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் சனத்தொகை குறையலாம்” என பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
"நம் நாட்டில் ஏராளமான இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஒருபுறம் பிறப்புகள் குறைந்து இறப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. சென்றவர்கள் திரும்பி வருவதில்லை. நமது மக்கள்தொகை எதிர்காலத்தில் குறையும் போக்கைக் காட்டுகிறது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.