1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதித் தேர்தலை 2024 செப்டம்பரிலும் பொதுத் தேர்தலை 2025 ஜனவரியில் நடத்துவதற்கும், ஜனாதிபதி விக்ரமசிங்கவினால்

தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் 'த லீடர்'க்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், மார்ச் மாதத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்னும் சில மாதங்கள் முழுநேரம் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தேசியத் தேர்தலில் வெற்றிபெற கட்சியின் அமைப்பை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகே, தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் ஜனாதிபதி அறிவித்ததாக, அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக்கூட்டத்தை காலி நகரில் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இணங்கியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி