ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழுவொன்றின் மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அங்கு அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அந்த இலங்கையர்களை கொடூரமாக தாக்கியதுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
ஜோர்தானில் உள்ள பல தொழிற்சாலைகளில் பணிபுரியும் இலங்கை இளைஞர்கள் குழு, வீசா காலம் முடிவடைந்த போதிலும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் தாமதம் செய்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதே, இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.