1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை அவர்கள் வந்த இழுவைப் படகுடன் கைது செய்யக் கடற்படையினர்

முயன்ற வேளை மேற்படி இழுவைப் படகுடன் கடற்படையினரின் படகு மோதியுள்ளது.

இதனால் இந்திய மீனவர்களின் படகு பெரும் சேதமடைந்து மீனவர்கள் உயிருக்குப் போராடிய சமயம் மீட்கப்பட்டு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 யாழ்ப்பாணம், காரைநகரை அண்மித்த கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை அவர்கள் வந்த இழுவைப் படகுகளுடன் கைது செய்ய இலங்கைக் கடற்படையினர் நேற்று நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது கடற்படையின் ஒரு படகு மோதியதில் இந்திய மீனவர்களின் ஒரு படகு சேதமடைந்துள்ளது. இருந்தபோதும் அதிலிருந்த மீனவர்கள் கடற்படையினரின் உதவியுடன் ஏனைய மீனவர்களால் மீட்கப்பட்டு தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

 கடற்படையினரின் படகு மோதியதில் படகின் பக்கத் திசையில் ஒரு பக்கம் பெரும் சேதமடைந்துள்ளது. இவ்வாறு சேதமடைந்த படகும் உடைவடைந்த நிலையில் தமிழகம் திரும்பியுள்ளது.

தமது படகு இலங்கைக் கடற்படையின் படகு மோதியதால் சேதமடைந்தபோதும் தாம் உயிர் தப்பி கரை சேர்ந்தோம் என்று இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி