கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும்
மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வானிலைக்கு ஏற்ப இந்த இயல்பு அவ்வப்போது மாறக்கூடும் என்றும் இது எல்லை தாண்டிய காற்று மாசுபாட்டால் ஏற்படும் நிலை என்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா அல்லது பிற ஆசிய நாடுகளில் இருந்து வரும் காற்று ஓட்டத்தால், காற்றின் தரம் மிகவும் சாதகமாக இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தக் காலப்பகுதியில் காற்றின் தரம் குறையும் நிலை ஏற்படுவது வழமையாக காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வளிமண்டலத்தின் தன்மையை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இது ஒரு தற்காலிகமான சூழ்நிலை என நம்புவதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.