1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கூற்றுப்படி, கடந்த வருடத்தில் 80,000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களின்

நீர் விநியோகம் கட்டணம் செலுத்தாமையால் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 30 இலட்சம் நீர் பாவனையாளர்களில் 80,970 பேருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

63,150 உள்நாட்டு வாடிக்கையாளர்களும் 17,820 உள்நாட்டில் அல்லாத வாடிக்கையாளர்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடிகாலமைப்பு சபையில் இருந்து நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட நுகர்வோரிடமிருந்து 1,909 மில்லியன் ரூபா மீளப்பெற வேண்டியுள்ளது. அத்துடன் நீர் கட்டணத்தை செலுத்தாமையால் 6,118 மில்லியன் ரூபாவை சபைக்கு அறவிட வேண்டியுள்ளது.

அவற்றுள் நீர் வழங்கல் சபைக்கு வைத்தியசாலைகளில் இருந்து 182 மில்லியன் ரூபாவும், பாடசாலைகளில் இருந்து 175 மில்லியன் ரூபாவும், இராணுவம் மற்றும் பொலிஸாரிடமிருந்து 116 மில்லியன் ரூபாவும் வசூலிக்க வேண்டியுள்ளது.

நீர் இணைப்புகளை துண்டித்துள்ள வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையில் 25 வீதத்தை செலுத்தி மீண்டும் இணைப்பை பெற்று எதிர்கால கொடுப்பனவுகளை தொடர முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பதினொரு அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான குடிநீர் இணைப்புகளுக்கு கிட்டதட்ட 46 இலட்சம் ரூபாய் நீர்க்கட்டணம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, காலி மாநகர சபையில் இரண்டு சட்டவிரோத நீர் இணைப்புகள் தொடர்பில் 19 வருடங்களாக 17 இலட்சம் ரூபா செலுத்தப்படவில்லை என்பதுடன்,

கொழும்பு மாநகர சபையில் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் மூன்று கோடி ரூபா கட்டணம் தற்போது வரை செலுத்தப்படவில்லை என்றும் தேசிய கணக்காய்வுத் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் திகதி வரை வர்த்தகர்கள் மற்றும் பிற கடனாளிகளின் 118 கோடி ரூபாய் கடன் நிலுவை தீர்க்கப்படாமல் இருப்பதாக குறித்த அறிக்கை தெரியவருகிறது.

மேலும் ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான கடன் மற்றும் முன்பணத்தை வசூலிக்காமல் 90 வீதத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டுள்ள விடயமும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

அதேபோன்று நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவருக்கு திறைசேரியின் அனுமதியின்றி மூன்று வாகனங்களும், மற்றும் முன்னாள் துணைத் தலைவருக்கு இரண்டு வாகனங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக திறைசேரியின் அனுமதியின்றி மாதாந்தம் 150 லீற்றர் எரிபொருளுக்கு மேலதிகமாக சபையின் முன்னாள் தலைவர் மற்றும் உப தலைவருக்கு 60,000 ரூபா எரிபொருள் முற்பணம் செலுத்தப்பட்டதாகவும் தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி