1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உகண்டாவுக்கான வியத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இன்று (19)

உரையாற்றவுள்ளார்.

அணிசேரா நாடுகளின் தலைவர்களது 19ஆவது உச்சி மாநாடு, உகண்டாவின் கம்பாலா நகரில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.

பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக உகண்டாவிற்கு நேற்று (18) விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு, துப்பாக்கி வேட்டு முழக்கத்துடன் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கம்பாலா நகரைச் சென்றடைந்த ஜனாதிபதியை உகண்டாவின் வெளிவிவகார அமைச்சர் ஓரியெம் ஒகெல்லோ மற்றும் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் கென்யாவிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கனகநாதன் ஆகியோர் விருந்தினரை வரவேற்றனர்.

சிகப்பு கம்பளம் மற்றும் அரச வரவேற்புடன் கூடிய இந்த வரவேற்பு இலங்கைக்கும் உகாண்டாவுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை வெளிப்படுத்தியது.

பிரமாண்ட துப்பாக்கி வேட்டு முழக்கம் விஜயத்தின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தியது மட்டுமல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டியது.

உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க உள்ளார். 

அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் (3rd South Summit of the Group of 77 & China) பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவெனியின் (Yoweri Museveni) அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு, “உலளாவிய கூட்டு செழுமைக்கான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்தல்” என்ற தலைப்பில் ஜனவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறவுள்ளது.

அதனையடுத்து, G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு ஜனவரி 21 – 22 ஆம் திகதி “எவரையும் கைவிடக்கூடாது” என்ற தலைப்பில் கம்பாலா நகரில் நடைபெறவுள்ளது.

மேற்படி இரு மாநாடுகளிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்ற உள்ளதோடு, ஆபிரிக்க வலயத்தில் காணப்படும் உலக தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

அணிசேரா நாடுகளின் அமைப்பில் 120 நாடுகள் அங்கம் வகிப்பதோடு, பெண்டூன்க் கொள்கையை மையப்படுத்தி அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் நோக்குடன் செயற்பட்டு வருகிறது.

இலங்கை அணிசேரா நாடுகள் அமைப்பின் ஆரம்ப உறுப்பினர் என்பதோடு 1976 – 1979 அதன் தலைமைத்துவத்தையும் வகித்துள்ளது. 1976 ஆம் ஆண்டில் 5 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டை இலங்கை நடத்தியது.

G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தெற்கு மாநாட்டில் 134 நாடுகள் அங்கம் வகிப்பதோடு, வர்த்தகம், முதலீடு, நிலையான அபிவிருத்தி, காலநிலை அனர்த்தம், வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மிகப் பெரிய கூட்டிணைவு என்ற வகையில், உலகளாவிய தெற்கு நாடுகள் தங்களது கூட்டு பொருளாதார தேவைகளை அறிவித்தல், மேம்படுத்தல் மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு என்பவற்றிக்கு இந்த மாநாடு களம் அமைக்கும்.

G77 மற்றும் சீன மாநாட்டின் தலைமைத்துவத்தை இதுவரையில் கியூபாவும், அணிசேரா நாடுகள் அமைப்பின் தலைமைத்துவத்தை அசர்பைஜான் குடியரசும் வகித்து வரும் நிலையில், மேற்படி இரு மாநாடுகளுக்கும் இம்முறை உகண்டா குடியரசு தலைமைதாங்க உள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் உகண்டா விஜயத்தில் வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, காலநிலை அனர்த்தம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி