வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2529வது நாட்களாக
சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
“எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே?”, “வேண்டும் வேண்டும் எமது உறவுகள் வேண்டும்”, “உறவுகளை மீட்க சர்வதேசம் வேண்டும்” போன்ற கோசங்களை எழுப்பியவாறும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 30 நிமிடங்களாக இடம்பெற்ற இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில், 30க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.