இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்ததையடுத்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் பிரியங்கர
நியமிக்கப்படவுள்ளார்.
பிரியங்கர, விமல் வீரவங்ச தலைமையிலான ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் மாவட்டத் தலைவராக செயற்படுகின்றார்.
அவர் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதால், அரசாங்கம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் என அரசியல் ஆய்வளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.