ஆண் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வது குற்றமாக்குவது உள்ளிட்ட திருத்தப்பட்ட தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை
அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பலாத்காரச் சட்டங்களில் திருத்தம் செய்யவும், பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டத்தில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலங்களை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு அதன் பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, தற்போதைய சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.