1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாளை வீதியில் இறங்கி தற்போதைய அரசாங்கத்தை அகற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ஐக்கிய மக்கள்

சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி நாளை வீதியில் இறங்குவம். பொலிஸ் மா அதிபரும் வேறு எவரும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

ஆனால் அனைத்து சட்டங்களையும் மீறி நாளை கொழும்பிற்கு 50,000 பேரை கொண்டுவருவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு நாங்களே மக்களின் எழுச்சியை ஆரம்பித்து வைத்தோம். இம்முறையும் அதனை செய்ய எண்ணியுள்ளோம்.

எங்கிருந்து பேரணியாக செல்வோம் என்பதை தற்போதைக்கு நாங்கள் அறிவிக்கமாட்டோம். நாளையே அறிவிப்போம் என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி