கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில், தேசிய நூலகத்திற்கு அருகில் சில நிமிடங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள்
சக்தியினால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர்.
"2024, ஒரு மாற்றத்தை உருவாக்கும் ஆண்டு" என்ற தலைப்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆசன அமைப்பாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து மகளிர் மற்றும் இளைஞர் கிளைகளின் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
அத்துடன், விவசாயிகள், மீனவர்கள், அரச ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி ஆர்வலர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.