இலங்கையில் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்தல், நிர்வகித்தல் மற்றும் செயற்படுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்புக்கான
புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவுடன் கையெழுத்திட உள்ளதாகவும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா தயாரித்துள்ளதாகவும், நமது வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த இந்திய முதலீடுகளின் முக்கியத்துவம் குறித்து விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
இது தொடர்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்ததுடன், அதன் பிரகாரம் வெளிவிவகார அமைச்சினால், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இலங்கையின் விமான நிலையங்களில் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பில் இந்தியா குறிப்பிடவில்லை என்றும், அதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்தார்.