தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று இன்றைய தினம் (05) குறித்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, அந்த கட்சியின் செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் இந்த விஜயத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனை தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்திய அரசாங்கத்தின் சில பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் இதன்போது உத்தியோகபூர்வமான சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.