1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

அஜித் தோவல் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த சந்திப்பானது டெல்லியில் உள்ள சர்தார் படேல் பவனில் நேற்று (05.02.2024) பிற்பகல் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இக்கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் உடனிருந்துள்ளார்.

இந்த சந்திப்பில், பிராந்திய பாதுகாப்பு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து நீண்ட மற்றும் நட்புரீதியான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மத்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழு நேற்று (05) காலை டெல்லி சென்றுள்ளது.

இந்த தூதுக்குழுவில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி