1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி

விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘‘அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது இடம்பெறவில்லை. அவரின் உரை நிறைவடைந்ததும் என்னிடம் வந்து நேரடியாக சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். அதற்காக சபையை புறக்கணிப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. எதிர்ப்பை வினயமாகச் சொல்லவேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ஜனாதிபதி ரணிலுக்கு, விக்னேஸ்வரன் ஆதரவளிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றில் உரையற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமை ஏற்புடையதல்ல எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி