நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை (ஒன்லைன் சட்டம்), பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர் சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதி பொறுப்பின் கீழ் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவிப்பின்படி, நேற்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் எதிர்க்கட்சிகளின் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.