1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கட்சியின் தலைமையை விமர்சிக்கும் மற்றும் கட்சியின் கூட்டு முடிவுகளை மீறும் எந்தவொரு நபருக்கும் எதிராக கடுமையான

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அவ்வாறு இல்லாவிட்டால் கட்சியின் ஒழுக்கம் சீர்குலைந்து விடும் என கட்சித் தலைமை கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றும் போது முழு குழுவும் சபையை விட்டு வெளியேறும் தீர்மானத்தை எடுத்தபோது, ​​அதை புறக்கணித்து ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் தங்கினர்.

இவ்வாறு குழுவாக தீர்மானங்களை எடுக்கத் தவறும் எம்.பி.க்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கட்சியின் தலைமைத்துவம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத்தை புறக்கணித்த போதிலும், ராஜித சேனாரத்ன உள்ளிட்டோர் அந்த தீர்மானத்தை நிராகரித்து பாராளுமன்றத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினுள் முறுகல் நிலை மற்றும் கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றும் வருகின்றது.

இதில் சரத் பொன்சேகா அண்மைய நாட்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும், சரத் பொன்சேகா நேற்று முன்தினம் நாடாளுமன்ற புதிய அமர்வின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவின் வேலைத்திட்டத்தையே ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னெடுத்துச் செல்வதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தற்போது அதனையே பிரதிநிதித்துவப்படுத்தும் வேலைத்திட்டத்தில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இந்த திட்டத்தில் சஜித் பிரேமதாஸவா அல்லது ரணில் விக்கிரமசிங்கவா முதலில் சாதிப்பது என்பதில்தான் எல்லாமே தங்கியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி