வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் கோயிலுக்கு, பௌத்த பிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்திருந்தது.
இராணுவப் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது கோயில் நிர்வாகத்தினரும் அங்கு பிரசன்னமாகியிந்தனர்.
இது தங்களது இடம் என குறித்த குழுவால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை மறுத்த கோயில் நிர்வாகத்தினர், இது தமது மூதாதையர்களால் பூர்விகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் என தெரிவித்திருந்ததாக தெரியவருகின்றது.
இதனை தொடர்ந்து அக்குழுவினர், ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் அருகில் பாதணிகளுடன் நடமாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.