சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வந்த மூன்று மாணவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில்,
அதே பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்களைக் கைது செய்துள்ளதாக சமனலவௌ பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 9 ஆம் திகதி இரவு வெளியில் இருந்து உணவை எடுத்து வந்து பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் இரவு உணவு உட்கொண்டு இருந்த சந்தர்ப்பத்திலேயே வேறு சில மாணவர்கள் மின்சாரத்தை துண்டித்து இந்தத் தாக்குதலை நடத்தி தலைமறைவாகி இருந்து நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான இரண்டு மாணவர்களும் ஒரு மாணவியும் தொடர்ந்து பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சமனலவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.