1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு, இந்தியா 300 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக மிஹிந்தலை

ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்தன தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறித்த பணம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் அண்மையில் இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த பயணத்தின் போது, இந்திய அரசாங்கத்தின் பல முக்கிய தரப்பினரை சந்தித்து அனுரகுமார திஸாநாயக்க பேச்சுக்களை முன்னெடுத்தார்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தேசிய மக்கள் சக்திக்கு இந்தியாவிடமிருந்து 300 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இந்த தகவலின் உண்மைத்தன்மையை தேசிய மக்கள் சக்தியினர் வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி