இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா, இன்றைய தினம் (16) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் அவர் பார்வையிட்டு வருகின்றார்.
அந்த வகையில் அவர் காங்கேசன்துறை துறைமுகத்தினை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாண இந்திய தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.