1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து சரத் பொன்சேகாவின் பதவி நீக்கத்தை தடுக்கும் வகையில், கொழும்பு மாவட்ட

நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நீக்குமாறு  அக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைமையிடம் கோரிக்கை விடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சரத் ​​பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த மனுவில் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சிலர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி