நாட்டிலுள்ள பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக, இன்றைய தினம் (21) கொழும்பில்
ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
தேசிய வளப் பாதுகாப்பு இயக்கத்தினால், கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த அந்த இயக்கம் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, மின்சார சபை, தொலைத்தொடர்பு நிலையம், காப்புறுதி நிறுவனம், தபால் நிலையங்கள், வங்கிகள், விமான நிலையங்கள் மற்றும் பல முக்கிய பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற திட்டத்திற்கு எதிராக தேசிய வளப் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.