தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் உபதலைவரும்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான.
தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) நேற்று இயற்கையெய்தினார். காலமாகும் போது அவருக்கு வயது 62 ஆகும்.
அண்மையில் நோய்வாய்ப்பட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (22) மாலை காலமானார்.
அவரது இறுதிச்சடங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1980ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தனது வாழ்க்கையை தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்த மூத்த போராளியான ஆர்.ஆர் மாலைதீவு மீதான புளொட் அமைப்பின் தாக்குதலில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.