பாப்பரசர் பிரான்சிஸ் (87), காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்துட் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று,
வத்திக்கான் தேவாலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வத்திக்கான் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“காய்ச்சல் காரணமாக பாப்பரசர் பிரான்சிஸ் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது அன்றாட நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் பாபர்பரசருக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை நடந்தமை குறிப்பிடத்தக்கது.