இலங்கையின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக, பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். சில
நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து அதற்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் தேஷ்பந்து தென்னகோனை, பொலிஸ் மா அதிபராக நிரந்தரமாக்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிரேரணை தொடர்பில் அரசியலமைப்பு பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், நான்கு உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் அளித்ததுடன், இருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இரு உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
அதன்படி, சபாநாயகரின் வாக்கெடுப்பே முடிவெடுக்கும் வாக்கெடுப்பாக கருதப்பட்டது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் 03 மாத பதவிக்காலம், நாளை மறுதினம் புதன்கிழமை (28) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.