பிரபல நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான உத்திக பிரேமரத்ன, தனது இராஜினாமா கடிதத்தை இன்று (27) காலை சபாநாயகரிடம்
சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினராக கடந்த பொதுத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான உத்திக பிரேமரத்ன, இந்த நாட்டின் அரசியல் கசப்பாக மாறியுள்ளதாக அண்மையில் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர், அவரது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.