முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்து வரும் சில வாரங்களில் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டை வந்தடைந்த பின்னர் கட்சியை ஒழுங்குபடுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பலவேக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாமல் ராஜபக்ஷ இந்த நாட்களில் அதிகளவில் விகாரைக்கு செல்வதற்கான காரணம் என்ன என வினவிய போது அதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச அவர் ஒரு பௌத்தர். மேலும், மகனும் தந்தையின் வழியில் நடக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.