1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரட்ன, நேற்றைய தினம் தனது நாடாளுமன்ற உறுப்பினர்

பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இந்தப் பதவி வெற்றிடத்திற்கு, எஸ்.சீ. முத்துகுமாரன நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள உத்திக்க, தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

உத்திக்கவின் பதவி விலகல் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் குசானி ரோஹனதீரவினால், தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேட்பாளர் பட்டியலில் உத்திக்கவிற்கு அடுத்தபடியாக கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்த முத்துகுமாரன, நாடாளுமன்ற ஊறுப்பினராக பதவி ஏற்றுக்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் ஆணைக்குழு இந்த பெயரை அங்கீகரித்ததன் பின்னர் முத்துகுமாரன பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி