யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில, ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள், இன்று (01)
கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் 10.995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின் கீழ், நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகியவற்றுக்கு, 2025 மார்ச் மாததத்திற்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்பு முறைகளை பெற்றுக்கொடுக்கப்படும் என்று? அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்தியாவை தளமாகக் கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம், இந்தத் திட்டத்தின் கீழ் 530 கிலோவோட் காற்றாலை மின்சாரம், 1700 கிலோவோட் சூரியசக்தி உட்பட சக்தி அமைப்புகளை இந்தத் தீவில் உருவாக்கவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்ட உதவிகளுக்காக, இந்திய அரசாங்கம் இலங்கைக்கான இந்திய தூதுவர், முன்னாள் தூதுவர் உட்பட இந்திய அதிகாரிகளுக்கு அமைச்சர் காஞ்சன விஜயசேகர நன்றி தெரிவித்துள்ளார்.