1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதிப் பதிவியை ஏற்றுக்கொண்ட பின்னர், முதன்முறையாக ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் பொதுக் கூட்டம்,

குளியாபிட்டியவில் நடக்கவுள்ளதென்று, ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

“நிதர்சனம்” என்ற பெயரில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் இந்தப் பொதுக் கூட்டம், எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கு, குளியாபிடிய நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளதென்று, அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ருவன் விஜேவர்தன, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, பாலித்த ரங்கே பண்டார, சாகல காரியவசம், ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணாயக்கார மற்றும் நவீன் திசாநாயக்க ஆயியோரும், இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இது தொடர்பான “நிதர்சனம்” கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அகில விராஜ் காரியவசத்தால், அழைப்பிதல் விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி