1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி அங்கத்துவம், பதவிகளை இடைநிறுத்துவதோடு,

ஒழுக்காற்று நடவடிக்கையை தடுத்தல் போன்றன தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

சரத் ​​பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று (04) மீள் பரிசீலனை செய்த கொழும்பு மாவட்ட நீதவான் சந்துன் விதான, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பொருளாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கே, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதி சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, குறித்த தடை உத்தரவுக்கு எதிராக ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை இடைநிறுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு கோரி தமது எதிர்ப்பினை தெரிவிப்பதாக, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், பிரதிவாதியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (04) அறிவித்தது.

சரத் ​​பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இந்த ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

சரத் ​​பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பொருளாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி