பல மாதங்களாக அமெரிக்காவில் இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ, இன்று (05) காலை 8.16
மணியளவில், எமிரேட்ஸ் விமானச் சேவைக்கு சொந்தமான EK 650 விமானத்தில் இலங்கை வந்தடைந்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோர் விமான நிலையத்துக்குச் சென்று, பெசில் ராஜபக்ஷவை வரவேற்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 25 பேர், நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சஞ்ஜீவ எதிரிமான்ன, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, சஹன் பிரதீப் விதான, ஜயந்த கெட்டகொட, இந்திக அனுருத்த, அருந்திக பெர்னாண்டோ, திஸ்ஸ குட்டியாரச்சி உள்ளிட்டோர், nபசில் ராஜபக்ஷவை வரவேற்க, விமான நிலையத்திலுள்ள சிறப்பு விருந்தினர் அறையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.