எதிர்காலத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டாலும், தற்போதுள்ள சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது கட்டாயம்
என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (06) இடம்பெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனிடையே, தேர்தல் செலவு ஒழுங்குமுறை சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெரியப்படுத்தும் செயலமர்வு, நேற்று இரண்டாவது நாளாக தேர்தல் கமிஷனில் நடந்தது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, “தேர்தல் சட்டத்திற்கு அமைவாக இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்” என்றார்.